ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைன் அரசைக் கவிழ்க்கும் நோக்கமா?
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை அறிவித்த போதும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ‘நாஜிக்களின் பிடியிலிருந்து’ விடுவிப்பதற்காகவே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்போது அவர் விளக்கபட் அளித்திருந்தார்.