ரஷ்யாவின் ஊடுருவல் தள்ளாடத் தொடங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்
உக்ரைன் ரஷ்யப் போரில் 26 நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் இராணுவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யா பல பகுதிகளில் தோற்கத்துவங்கியுள்ளது என்று பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலேஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைனுடைய இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் மேலும் 1.5 பில்லியன் யூரோக்களை அளிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளதுடன் ரஷ்யா துவங்கிய உக்ரைன் ஊடுருவல் பலபகுதிகளில் தள்ளாடத் தொடங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
சண்டையும் உயிரிழப்புக்களும் தொடர்வது உண்மைதான் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் ஆனால் ரஷ்யா போரில் தோற்கத் தொடங்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு ஆப்ரேஷன்
சிறப்பு ஆப்ரேஷன் என்ற பெயரில் ரஷ்யா துவங்கிய உக்ரைன் ஊடுருவல், பல முறை மாற்றம் செய்யப்பட்டு, இப்போது வெறும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை மட்டும் குறிவைக்கும் அளவில் வந்து நிற்கிறது என்றும் பென் வாலேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.