செம்மணி மனித புதைகுழி அவலம் : பிரித்தானிய அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
யாழ்.செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran), பிரித்தானிய (United Kingdom) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி
குறித்த பதிவில் “மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட செம்மணியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களை ஒரு பேரழிவு தரும் நினைவூட்டல்.
இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச பங்காளிகளுடன் சேர்ந்து, முழுமையான விசாரணைக்கு பிரிட்டன் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செம்மணி சித்துபாத்தி புதைகுழி அகழ்வில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
