இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை

United Nations Geneva Ranil Wickremesinghe Sri Lanka
By pavan Sep 12, 2022 12:44 PM GMT
Report

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும், முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும், தண்டனையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், மனித உரிமைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான ஆழமான நிறுவன, ஜனநாயக மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேசிய உரையாடலை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான செயல் உயர் ஆணையர் நாடா அல்-நஷிஃப் இலங்கையின் புதிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

“மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 46 - 1 இற்கு மேலதிகமாக, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த தனது அலுவலகத்தின் விரிவான அறிக்கை” எனும் தலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இன்று பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த மாதங்களில் பணவீக்கம் அதிர்ச்சியூட்டும் வகையில் 66.7 சதவீதமாக உள்ளது.

பல மாதங்களாக இலங்கையர்கள் எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்பின்மை

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை | Un Human Rights Councilun Report On Sri Lanka

6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைக்கான மக்களின் உரிமையை பலவீனப்படுத்தியுள்ளன.

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கிடையில், உரிமைகளுக்கான சக்திவாய்ந்த வெளிப்பாடாக, இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் மாற்றத்தை கோரி குறிப்பிடத்தக்க பொதுமக்களின் எதிர்ப்புகளையும் நாடு கண்டது.

பல்வேறு சமூகப் பொருளாதார, கலாசார, இன மற்றும் மதப் பின்னணியைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும், பொருளாதார தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு பொறுப்புக் கூறுவதற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நாடு தழுவிய பல மாத போராட்டங்கள் இறுதியில் ஜூலை 14 அன்று அதிபரின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. இதனையடுத்து 2022, ஜூலை 20 அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனநாயக சீர்திருத்தங்கள்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை | Un Human Rights Councilun Report On Sri Lanka

இலங்கை இந்த மாற்றங்களை பெரும்பாலும் அமைதியான முறையிலும் அதன் அரசியலமைப்பின்படியும் வழிநடத்தியுள்ளது, ஆனால் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை பலவீனமாக உள்ளது மற்றும் மேலும் உறுதியற்ற தன்மைக்கான சாத்தியம் உள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அனைத்து சமூகங்களிலிருந்தும், குறிப்பாக இளைஞர்களின் பரந்த அடிப்படையிலான கோரிக்கைகள், இலங்கையின் எதிர்காலத்திற்கான புதிய மற்றும் பொதுவான பார்வைக்கான ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியை முன்வைக்கின்றன.

எனவே மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும், முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும், தண்டனையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், மனித உரிமைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான ஆழமான நிறுவன, ஜனநாயக மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேசிய உரையாடலை மேற்கொள்ளுமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு செய்யும்போது, சுதந்திரமான கருத்து, அமைதியான கூட்டம் மற்றும் உள்ளடங்கிய ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றை மதிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது அவசியம்.

சமீபத்திய வாரங்களில் கவலைக்குரிய வகையில், போராட்ட இயக்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் தலைவர்களைக் கைது

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை | Un Human Rights Councilun Report On Sri Lanka

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி மூன்று மாணவர் தலைவர்களைக் கைது செய்ய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியமை குறிப்பாக கவலையளிக்கிறது, கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்பியிருக்காமல், அமைதியான போராட்டம், விமர்சன விவாதம் மற்றும் விவாதத்திற்கான சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கும் முரண்பாட்டின் பாரம்பரியத்தை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்திற்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை தேசத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதியளித்த அதிபர் தனது முதலாவது உரையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த தொனியை நான் வரவேற்கிறேன்.

மேலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் நிலைமாறுகால நீதி மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு கடந்த மனித உரிமை மீறல்களில் சிக்கிய இராணுவ அதிகாரிகள் அல்லது முன்னாள் துணை இராணுவத் தலைவர்களை நீக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

முக்கியமாக இந்து அல்லது முஸ்லீம் இடங்களில் பௌத்த பாரம்பரியத்தை நிறுவுவது அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ நிலைகளை விரிவுபடுத்துவது தொடர்பான காணி தகராறுகள் தொடர்வது, நல்லிணக்கத்தை மேலும் மேலும் குலைத்து புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை | Un Human Rights Councilun Report On Sri Lanka

சிவில் சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்ட குழுக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் கவலையளிக்கின்றன.

அடிப்படை பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கலை இல்லாமல் செய்யாத நிலையில், இந்த பரவலான கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை கலாசாரம் முடிவுக்கு வராது.

யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்களாகியும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், நீதியை நாடி, தமது அன்புக்குரியவர்களின் கதியைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றன.

அவர்களுக்கு இழப்பீடுகள் தேவைப்படுகின்றன. வினைத்திறனான நிலைமாறுகால நீதிச் செயன்முறையைத் தொடரவும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் இலங்கை அரசு பலமுறை தவறிவிட்டது.

மாறாக, எங்கள் முந்தைய அறிக்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அடுத்தடுத்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அரசியல் தடைகளை உருவாக்கி, போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட சில இராணுவ மற்றும் முன்னாள் துணை இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தி,புரிதலை முன்வைக்கத் தவறிவிட்டன.

இதேபோல், சில சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டின் பயங்கரமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றிய உண்மையை நிறுவுவதற்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்தநிலையில் விசாரணையைத் தொடர, சர்வதேச உதவியுடன் ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுக்கிறது.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் இந்த அடிப்படைச் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு, நாட்டில் மாறிவரும் சூழ்நிலைகளால் வழங்கப்பட்ட வாய்ப்பை அரசாங்கம் இப்போது பயன்படுத்திக் கொள்ளும் என்பது இந்த அலுவலகத்தின் நம்பிக்கையாகும்.

இலங்கையில் தற்போதைய மற்றும் பயனுள்ள பொறுப்புக்கூறல் தெரிவுகள் இல்லாத நிலையில், சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில் மாற்று உத்திகளைப் பின்பற்றுமாறு உயர்ஸ்தானிகர் ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தீர்மானம் 46/1, பத்தி 6க்கு இணங்க பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக எனது அலுவலகத்தில் நிறுவப்பட்ட குழு முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இது பாலினம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான மீறல்கள் உட்பட, செயல்திறன் மிக்க புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது, மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆதாரங்களை ஒரு களஞ்சியமாக ஒருங்கிணைக்கிறது.

குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் வெளியான அறிக்கை | Un Human Rights Councilun Report On Sri Lanka

இது எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு உதவும். உரிமை மீறல்களைப் பற்றி பேசுபவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்கு உதவும். சபையின் 49வது அமர்வில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டது போல், இந்த பொறுப்புக்கூறல் பணியின் அளவு மற்றும் வகைக்கு போதுமான நேரம், நிதி ஆதாரங்கள் மற்றும் நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

எனவே இந்த முக்கியமான பணி சரியான முறையில் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நான் இந்த சபையை வலியுறுத்துகிறேன்.

தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஒரு மையத் தடையாக உள்ளது.

இந்த தண்டனையின்மை மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான வளமான நிலத்தை உருவாக்கியுள்ளது, அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பங்களிக்கிறது.

46-1 தீர்மானத்தின் கீழ் இந்த சபை வழங்கிய ஆணையானது, மனித உரிமை நிலைமையை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் ஆகியவற்றைத் தொடர்வதற்கும், இலங்கையர்களால் வெளிப்படுத்தப்படும் மாற்றத்திற்கான பரந்த அடிப்படையிலான அபிலாஷைகளுக்கும் பதிலளிக்கிறது.

ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026