பூமியின் நரகம் காசா என்கிறது ஐ.நா
பூமியில் நரகமொன்று இருக்குமாயின் அது வடக்கு காசாவே என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வடக்கு காசாவில் சிக்குண்டுள்ளதாக கூறியுள்ள அலுவலகத்தின் பேச்சாளர், அந்தப் பகுதிக்கான உதவிப் பொருட்களை கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு காசாவில் தற்போதுள்ள நிலைமையானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும் பகலில் அச்சமும் இரவில் இருளும் நிறைந்த ஒன்றாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பு
இந்த நிலையில் காசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகள் உட்பட பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரிய அபாயம்
அத்தோடு, காசா நகரில் உள்ள அல் ஷிபா வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான நோயாளர்களுடன் இடம்பெயர்ந்த பலரும் தஞ்சமடைந்துள்ளதால் பாரிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காசா நகரிலுள்ள அல் ஷிபா மருத்துவ கட்டடத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அல் ஷிபா வைத்தியசாலைக்கு அருகே தமது படையினர் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்