கூரிய ஆயுதத்தால் தாக்கி மருமகனை கொலை செய்த மாமா!
வெலிகம - பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (17) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் (மாமா) இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், குறித்த நபரால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, குற்றத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |