சிறிலங்கா அரசாங்கமும் படையினரும் தப்பிக்க கூடாது!

Human Rights Council United Nations Geneva R. Sampanthan OHCHR
By Kalaimathy Sep 16, 2022 05:06 AM GMT
Report

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே ஐ.நாவில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியது. இவ்வாறு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சிறிலங்கா தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகளும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கமும் படையினரும் தப்பிக்க கூடாது! | United Nation Human Rights Geneva Tna Sampanthan

அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் நாடா அல் -நஷீப்பின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் சிறிலங்கா தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம்.

அறிக்கைக்கு வரவேற்பு

சிறிலங்கா அரசாங்கமும் படையினரும் தப்பிக்க கூடாது! | United Nation Human Rights Geneva Tna Sampanthan

அதேவேளை . சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருகின்றது.

அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையையும் கூட சிறிலங்கா நடைமுறைப்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில்தான் இருக்கின்றது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா அரசாங்கமும் படையினரும் தப்பிக்க கூடாது! | United Nation Human Rights Geneva Tna Sampanthan

அதன் கீழ் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அந்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றி வந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இந்தமுறை ஜெனிவாவில் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீரவேண்டும்” என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி