ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்!

United Nations Missing Persons Geneva Ali Sabry Sri Lanka
By Kalaimathy Sep 13, 2022 05:37 AM GMT
Report

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.

அதன் போது, அங்கு உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்துத் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் உறவுகள்

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்! | United Nation Human Rights Missing Persons Geneva

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில், அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. 

இதேவேளை இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம். 

இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது.

அலி சப்ரியின் கருத்திற்கு கடும் கண்டனம்

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்! | United Nation Human Rights Missing Persons Geneva

இவ்வாறான நிலையில், சுயாதீன உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த தேவையான ஆதரவு மற்றும் வளங்களை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்றைய முதல் நாள் அமர்வில் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புறந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்ததோடு, அவரின் கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015