கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவனை காணவில்லை : தேடுதல் மும்முரம்
University of Kelaniya
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
By Sumithiran
களனி பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையின் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி கடலில் காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தளை, யுதகனாவவில் வசிக்கும் களனி பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையின் 3 ஆம் ஆண்டு மாணவரான ருவான் யாப்பா என்பவரே காணாமல் போனவர் என காவல்துறையினரின் கூற்றுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் நீராடியவேளை சம்பவம்
காணாமல் போன பல்கலைக்கழக மாணவர், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் நேற்று(02) பாணந்துறை கடற்கரைக்கு வந்து, தனது உறவினருடன் பாணந்துறை கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

காணாமல் போன பல்கலைக்கழக மாணவரை காவல்துறையினரும் கடற்படையினரும் பாணந்துறை கடலில் தேடி வருகின்றனர், ஆனால் இரவு வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி