முகநூல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
வெறுப்புணர்ச்சியுடன் பின்னூட்டல்
முகநூலில் வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் பின்னூட்டல் செய்தால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் பதிவுகள் மற்றும் கருத்துக்களை பரப்பியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதியன்று முகநூல் சமூக ஊடக வெளியிடப்பட்ட விளம்பரத்தால் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு உப பிரிவினரால் விசாரிக்கப்பட்டு நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,