ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானுடனான தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 15 அம்ச அமைதித் திட்டத்தை (15-point peace plan) ஈரானுக்கு அனுப்பியுள்ளது.
இந்தத் திட்டம் பாகிஸ்தான் மூலம் (Pakistan's army chief உதவியுடன்) ஈரானுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரு நாட்களில் மிக நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
விரிவான விவாதங்கள்
மத்திய கிழக்கில் உள்ள எதிர்ப்புகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விரிவான விவாதங்கள் நடந்துள்ளன” என்று கூறியுள்ளார்.

மேலும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்பது திட்டத்தின் முதல், இரண்டு, மூன்றாவது முக்கிய புள்ளிகளாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்,
- அணு நிகழ்ச்சி நிரல்: ஈரானின் அணு திட்டத்தை முழுமையாகக் கலைத்தல், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துதல், மூன்று முக்கிய அணு தளங்களை அகற்றுதல்.
- ஐந்து ஆண்டுகளுக்கு ஏவுகணை திட்டத்தை நிறுத்துதல் அல்லது கட்டுப்படுத்துதல்.
- ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாகத் திறக்க வேண்டும்.
- ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட பிராக்ஸி குழுக்களுக்கு ஆதரவை நிறுத்துதல். கடல் வழிகள் பாதுகாப்பு, ஏவுகணை வரம்பு கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஈரான் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அமெரிக்கா முழு பொருளாதாரத் தடைகளை நீக்குதல், புஷேர் அணு மின் நிலையத்துக்கு உதவி, முன்பு நீக்கப்பட்ட ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்கும் “ஸ்னாப் பேக்” வழிமுறையை நீக்குதல் உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
தற்போதைய நிலைப்படி ட்ரம்ப் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ஐந்து நாட்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இருப்பினும், ஈரான் இந்தப் பேச்சுவார்த்தைகளை “பொய்யான செய்தி” என்று மறுத்துள்ளது. போர் தொடர்கிறது என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை “நட்பு” கப்பல்களுக்கு மட்டும் திறக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இந்தத் திட்டத்தைப் பற்றி கவலை தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த 15 அம்சத் திட்டம் 2025-ல் முன்மொழியப்பட்ட பழைய அணு பேச்சுவார்த்தை கட்டமைப்பின் அடிப்படையில் இருப்பதாக சில தூதர்கள் கூறுகின்றனர்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 17 மணி நேரம் முன்