ஏமனில் அமெரிக்கா நடத்திய கோர தாக்குதல்: 38 பேரை கடந்தது பலி எண்ணிக்கை
ஏமனில் (Yemen) அமெரிக்கா (USA) இன்று மிகப்பெரிய வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாஸுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் தாக்குதல்
மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதுடன் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க ட்ரோன்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் அமெரிக்கா இன்று (18) அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதன்படி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன், ரைசா நகரில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு, துறைமுகத்துககு அமெரிக்கா வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் 38 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதுடன் 102 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலானது ஏமன் மீது அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
