உக்ரைனுக்கு வந்து குவியப்போகும் ஆயுதங்கள் -அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு 250 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய இராணுவ உதவி வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவ்வாறு வழங்கப்படவுள்ள ஆயுதங்களில் AIM-9M விமான எதிர்ப்பு ஏவுகணைகள், HIMARS ஏவுகணைகள், 155 மிமீ மற்றும் 105 மிமீ ஆட்லறி செல்கள், கண்ணிவெடி அகற்றும் கருவிகள், ஜவ்லின்ஸ் மற்றும் பிற தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் அடங்கும்.
பல்வேறு வகையான ஆயுதங்கள்

அத்துடன் சிறிய ஆயுதங்கள், அம்புலன்ஸ் கார்கள் மற்றும் தடைகளைத் துடைப்பதற்கான வெடிகுண்டுகள், உதிரிப் பாகங்கள், சேவைகள், பயிற்சி மற்றும் போக்குவரத்துக்கான நிதியுதவி ஆகியவற்றிற்கான மூன்று மில்லியனுக்கும் அதிகமான வெடிமருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
பென்டகன் வெளியிட்ட அறிக்கை

இந்த உதவியானது, "போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளவும், அதன் மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைனுக்கு உதவும்" என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.