கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவான SOUTHCOM வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
SOUTHCOM-இன் தகவலின்படி, செப்டம்பர் 19ஆம் திகதி அதன் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு அரைக்கோளத்துக்கான கூட்டுப் பணிக்குழு, கரீபியன் கடலில் வழக்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறும் பாதையில் பயணித்த அதிவேகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலதிக விபரங்கள்
உளவுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த கப்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் SOUTHCOM தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற கரீபியன் கடலின் குறிப்பிட்ட பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என Reuters தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |