அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம்

Donald Trump United States of America Iraq Venezuela
By Dharu Jan 05, 2026 07:23 AM GMT
Report

உலக அரசியலில் அமெரிக்கா பலநூற்றாண்டுகளாக உலகத் தலைமை நாடு எனப் பெரும்பாலும் கருதப்படுகிறது.

அதன் தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஆதிக்கம் மற்றும் பிராந்திய செல்வாக்கு ஆகியவைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா மிகவும் செயல்படுகிறது.

இந்த நிலைப்பாட்டின் விளைவாக, அமெரிக்கா முக்கிய வெளிநாட்டு தலைவர்களை நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தும், அகற்றும், அல்லது தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

20-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21-ஆம் நூற்றாண்டிலும், அமெரிக்கா சில வெளிநாட்டு அரசியல் தலைவர்களை “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்”, “சர்வதேச குற்றவாளி”, அல்லது “ஜனநாயக விரோத ஆட்சியாளர்” என வரையறுத்து, அவர்களை அகற்றுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.

சிறையில் இருந்து வெளிவரும் மதுரோ: பெரும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு.!

சிறையில் இருந்து வெளிவரும் மதுரோ: பெரும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு.!

Operation Absolute Resolve

ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்க இராணுவம் "Operation Absolute Resolve" என்ற பெயரிலான சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸை காரகஸில் உள்ள அவர்களது இல்லத்தில் கைப்பற்றியது.

அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம் | Us Diplomatic Intelligence Politics

இந்நடவடிக்கையின் போது, வெனிசுலாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மதுரோ தம்பதியினர் உயிருடன் பிடிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் டிடென்ஷன் சென்டரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட குற்றப்பத்திரிகையின்படி, மதுரோ மீது நார்கோ-டெரரிசம் (போதைப்பொருள் தொடர்பான பயங்கரவாதம்), கொகெய்ன் இறக்குமதி சதி, ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகள் 2020 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தவை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்நடவடிக்கையை "போதைப்பொருள் போரின்" ஒரு பகுதியாகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அவசியமானதாகவும் விவரித்தார்.

மதுரோவை விடுவிக்காவிட்டால்...! அமெரிக்காவிற்கு வெனிசுலா படையின் அதிரடி எச்சரிக்கை

மதுரோவை விடுவிக்காவிட்டால்...! அமெரிக்காவிற்கு வெனிசுலா படையின் அதிரடி எச்சரிக்கை

இறையாண்மை மீறல்

அமெரிக்கா தற்காலிகமாக வெனிசுலாவின் நிர்வாகத்தை கையாளும் எனவும், நியாயமான இடைக்கால ஆட்சி மாற்றம் வரை அந்நாட்டை "நிர்வகிக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம் | Us Diplomatic Intelligence Politics

வெனிசுலா அரசு இதனை "இறையாண்மை மீறல்" மற்றும் "கடத்தல்" என கண்டித்துள்ளது. துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தற்போது இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

சர்வதேச அளவில், ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலவையான எதிர்வினைகள் காணப்படுகின்றன.

இச்சம்பவம், கடந்தகால அமெரிக்காவின் இராணுவ பலத்தின் நகர்வுகளை நினைவுப்படுத்துகிறது.

- ஈராக்கின் சதாம் உசேன்

- பனாமாவின் ஜெனரல் மானுவல் அன்டோனியோ நோரிகா

- வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்கா இதனை சட்ட நடைமுறையாக்க நடவடிக்கையாக வலியுறுத்துகிறது. மதுரோவின் முதல் நீதிமன்ற விசாரணை ஜனவரி 6 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு பிராந்திய அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கலாம் என்பதால், சர்வதேச சமூகம் நெருக்கமாக கண்காணித்து வருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் உலக அரசியல் அரங்கில் அமெரிக்கா எடுத்த சில நடவடிக்கைகள், அந்த நாடு தன்னை ஒரு உலக காவலன் போலப் பார்க்கிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன.

ஈராகின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன், பனாமாவின் முன்னாள் ஆட்சியாளர் மானுவல் அன்டோனியா நோரிகா, மற்றும் வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஆகிய மூன்று தலைவர்களும், அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் வெவ்வேறு கட்டங்களில் குறிவைக்கப்பட்ட முக்கியமான நபர்களாகக் கருதப்படுகின்றனர்.

சிறைபிடித்த அமெரிக்க அதிகாரிகளுக்கு மதுரோ கூறிய செய்தி...!

சிறைபிடித்த அமெரிக்க அதிகாரிகளுக்கு மதுரோ கூறிய செய்தி...!

ஈராக்: சதாம் உசேன்

சதாம் உசேன் 1979 முதல் 2003 வரை ஈராக்கில் அதிகாரத்தில் இருந்தவர். பனிப்போர் காலத்திலும் பின்னரும், அவர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிரான பிராந்திய செல்வாக்கை விருத்தி செய்தார்.

அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம் | Us Diplomatic Intelligence Politics

1990ல் குவைத் மீது மேற்கொண்ட அகிரமிப்பு, அமெரிக்காவுக்கு நேரடி பாதுகாப்பு சவாலாக அமைந்தது.

மேலும், ஈராக்கில் பெரும் அழிவு ஆயுதங்களை (WMD) வைத்திருப்பதாகவும், சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அமெரிக்காவின் நடவடிக்கை

CIA மற்றும் NSA வழியாக நீண்டகால உளவுத்துறை கண்காணிப்பில் 2003ல் “Operation Iraqi Freedom” என்ற இராணுவ படையெடுப்பு மூலம் அதிகாரத்திலிருந்து சதாம் அகற்றப்பட்டார்.

பின்னர் சதாம் கைப்பற்றப்பட்டு, அமெரிக்கா ஆதரவுடன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டார்.

சர்வதேச எச்சரிக்கை மற்றும், புலனாய்வு உலக அரசியலில் “நேரடியாக எதிரியை அகற்றும் precedent” உருவாக்கப்பட்டது.

இதனால் பிராந்திய நிலைமை பதட்டத்திற்கு உள்ளாகி, மற்ற நாடுகளுக்கும் வலிமையான எச்சரிக்கை அமெரிக்கா வழங்கியது.

இதில் WMD குற்றச்சாட்டை வாதமாக காட்டினாலும், முக்கியமானது அவரது பிராந்திய செல்வாக்கை கட்டுப்படுத்தும் தந்திரம் என்ற செய்தியை அமெரிக்கா உலகிற்கு அளித்தது.

பனாமா: நோரிகா

மானுவல் அன்டோனியோ நோரிகா ஆரம்பத்தில் CIA உடன் இணைந்து செயல்பட்டார். அவர் பனாமாவின் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய இடத்தை வகித்தார்.

அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம் | Us Diplomatic Intelligence Politics

ஆனால் பின்னர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அவர் எதிரியாக மாறினார்.

அவருக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை 1989ல் “Operation Just Cause” என்ற குறுகிய கால இராணுவ நடவடிக்கை.

இதில் நோரிகா கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் பொது கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த நகர்வு அரசியல் இடமாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பாதிப்புகளை வெளிப்படுத்தியது.

குறுகிய கால நடவடிக்கை மூலம் அமெரிக்கா எவ்வாறு முன்னோடியான தலைவர்களை உருவாக்கலாம் என்பதைக் காட்டியது.

சர்வதேச சட்டங்களை மீறிய அமெரிக்கா...! வெனிசுலா விவகாரத்தில் கொதித்தெழுந்த வடகொரியா

சர்வதேச சட்டங்களை மீறிய அமெரிக்கா...! வெனிசுலா விவகாரத்தில் கொதித்தெழுந்த வடகொரியா

வெனிசுலா: மதுரோ

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா இதுவரை நேரடி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

மதுரோ மீது தேர்தல் முறைகேடு, மனித உரிமை மீறல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு கைப்பற்றல் கொள்கையில் ட்ரம்பின் இராஜதந்திரம் | Us Diplomatic Intelligence Politics

அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்காக, கடுமையான பொருளாதார தடைகள், அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள், வெனிசுலா எதிர்க்கட்சிக்கு அரசியல் ஆதரவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், மதுரோ இன்னும் ஆட்சியில் நீடிக்கிறார்.

இதனால், நேரடி கைப்பற்றல் இல்லாத, நீண்டகால அரசியல்-பொருளாதார அழுத்தமே அமெரிக்காவின் தற்போதைய உத்தியாக பார்க்கப்படுகிறது.

ஒரு தலைவர் அமெரிக்க தேசிய நலனுக்கு எதிரியாக கருதப்பட்டால், அவரை அகற்றுவதற்கான வழிமுறை அந்த நாட்டின் வலிமையைப் பொறுத்து மாறும்.

பலவீனமான நாடுகளில் இராணுவ தலையீடு, சிறிய நாடுகளில் சட்ட நடவடிக்கை, வளமிக்க மற்றும் சர்வதேச ஆதரவுள்ள நாடுகளில் பொருளாதார அழுத்தம் என்பதே அமெரிக்க அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா...! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை

திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா...! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015