ஐக்கிய நாடுகள் சபையில் வார்த்தையால் மோதிக்கொண்ட அமெரிக்கா - ஈரான்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் தொடங்கிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த (Nuclear Non-Proliferation Treaty) மீளாய்வு மாநாட்டில், ஈரானின் பங்கு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று(287.04.2026) இடம்பெற்றுள்ளது.
1970-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த NPT ஒப்பந்தத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் 11-வது மாநாடு நியூயார்க்கில் ஆரம்பமானது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
மாநாட்டிற்கான 34 துணைத் தலைவர்களில் ஒருவராக ஈரான் தேர்வு செய்யப்பட்டதாக, மாநாட்டின் தலைவர் மற்றும் வியட்நாமின் ஐ.நா. தூதர் டோ ஹுங் வியட் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு பணியகத்தின் உதவிச் செயலாளர் கிறிஸ்டோபர் ஏ. ஃபோர்ட், “NPT விதிமுறைகளை தொடர்ந்து மீறி வரும் ஈரானை இப்படிப்பட்ட பதவிக்கு தேர்வு செய்தது அவமதிப்பானது எனக் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து International Atomic Energy Agency(IAEA) உடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் IAEA தூதர் Reza Najafi, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்ற மற்றும் அரசியல் நோக்கமுடையவை எனத் திட்டவட்டமாக மறுத்தார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடான அமெரிக்கா தன்னை விதிமுறைகளின் காவலராக காட்டிக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
அணு ஆயுத தயாரிப்பு
இந்த விவகாரம், சமீபத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட இரு மாத மோதலின் மையப்புள்ளியாகவும் உள்ளது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்ட,
“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்படாது” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரான், யுரேனியத்தை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செறிவூட்டுவதாகக் கூறி வந்தாலும், மேற்கத்திய நாடுகள் அது அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என்று எச்சரித்து வருகின்றன.
IAEA மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி, ஈரான் 2003-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அணு ஆயுதத் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
மேலும், வளைகுடாப் பகுதி கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அணுசக்தி பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாக ஈரான் முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் Karoline Leavitt, “ஈரான் தொடர்பான அமெரிக்காவின் சிவப்பு கோடுகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |