சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!
அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
ஈரான் சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அதிகளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி வருகிறார்.
முன்னதாக ஓமனில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில், ஜெனிவா பேச்சுவார்த்தை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வலிமையான இராணுவம்
இந்த முறையும் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு அது மிகவும் மோசமான நாளாக மாறும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, உலகின் வலிமையான இராணுவம் கூட சில நேரங்களில் கடுமையான அடி வாங்கி மீண்டும் எழ முடியாமல் தவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஹார்முஸ் நீரிணைப்பில் ஈரான் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது படைகளை மேற்காசியப் பகுதியில் குவித்து வரும் அதேவேளை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
இந்த ஜெனிவா பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டுமா அல்லது ஒரு பாரிய போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்