இறையாண்மை பேசும் வாஷிங்டன் - தவிக்கும் கொழும்பு! வல்லரசுகளின் நிழற்போரில் சிக்கும் இலங்கை
மத்திய கிழக்கு மோதலின் நிழற்போரில் எதிர்பாராத விதமாக மாட்டிய இலங்கையை மையப்படுத்திய வாஷிங்டனின் அண்மைய சுருதிகள் இருகருக்கு பட்டயம் போல வந்துள்ளன.
ஒருபுறத்தே ஈரானிய கடற்படையினர் தொடர்பான விடயங்களில் இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாகவும் ஈரானிய கப்பல்; அதன் ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவை சிறிலங்கா எடுக்கும் என வாஷிங்டன் சொல்கிறது.
ஆனால் மறுபுறத்தே ஈரானிய போர்க்கப்பல்கள் எங்கே நின்றாலும் அது ஒரு சட்டபூர்வமான இராணுவ இலக்கு என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை எல்லைக்கு அருகே ஈரானிய கப்பலைத் தாக்கியிருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு சிறிலங்காவின் ஆட்சித்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் உள்ள நிலையில் ஈரானிய கப்பல் அதன் மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவை சிறிலங்கா எடுக்கலாம் என வெளிப்பார்வைக்குச் சொல்லத் தலைப்படும் வாஷிங்டன் உள்ளரங்கமாகத் தங்களை மீறி கொழும்பு ஒரு முடிவை எடுக்க முடியுமா ? எனச் செக்மேட் வைக்கவும் தலைப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விடயங்கள் வளைகுடா நிலவரங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் இலவச அறிவிப்புகள் மற்றும் அவரிடம் மணமுறிவு கோரும் அவரது மனைவியான ஈழத் தமிழ் பூர்வீக சங்கீதா அவரது நீலாங்கரை வீட்டை மையப்படுத்தி முன்னகர்த்தும் நகர்வுகள் தொடர்பான விடயங்களைத் தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |