மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான தூதுவராக பாகிஸ்தான் செயல்பட்டு வரும் நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இன்று பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் முதற்கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் அவர் பாகிஸ்தான் வரவுள்ளதாக தெரியவருகிறது.
அதீத இரகசியத்தன்மை
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நேரடி இராஜதந்திர உறவுகள் இல்லாத சூழலில், பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றது. இரு தரப்பிலிருந்தும் பரிமாறப்படும் செய்திகள் பாகிஸ்தான் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

ஈரானியத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து பாகிஸ்தான் வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அதீத இரகசியத்தன்மையுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.
அடுத்தகட்ட நகர்வு
மஸ்கட்டிலிருந்து திரும்பவுள்ள அமைச்சர் அராக்ச்சி மற்றும் அவரது குழுவினர், ஈரானிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்களுடன் மீண்டும் பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளே அமெரிக்க-ஈரான் உறவுகளின் அடுத்தகட்ட நகர்வையும், பிராந்தியத்தின் அமைதியையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்