ஈரானின் முக்கிய நீர்தேக்கத்தின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் திடீர் தாக்குதல்...
ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹஃப்ட்கெல் என்னும் இடத்தில் இருக்கும் நீர்த்தேக்கத்தை, தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட குறித்த நீர்த்தேக்கம் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக, துணை ஆளுநர் வாலியோல்லா ஹயாதியை மேற்கோள் காட்டி ஈரானின் அரச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட தற்போதைய போர் தொடர்ந்தால், அது ஒரு பரந்த உலகளாவிய நெருக்கடியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என துருக்கியின் தேசிய உளவு அமைப்பான எம்.ஐ.டி-யின் தலைவர் இப்ராஹிம் காலின் எச்சரித்துள்ளார்.
STRATCOM உச்சி மாநாடு
சனிக்கிழமையன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற STRATCOM உச்சி மாநாடு 2026-ல் உரையாற்றிய இப்ராஹிம் காலின், "பெருந்தொற்றுக்குப் பிறகு, நமது உலகம் பல முக்கியமான திருப்புமுனைகளையும், நெருக்கடிகளையும், பிளவுகளையும் சந்தித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலிய போரின் விளைவுகள் தொடர்ந்து உணரப்பட்டு வருகின்றன என்றும் காலின் கவலை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |