காத்திருந்து திடீரென தாக்கிய ஈரான்! முற்றாக முறியடித்த அமெரிக்க படைகள்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள CENTCOM, “மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியில், இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினர் (IRGC) ஈரானிலிருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.
ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் தொடர்ந்து விழிப்புடனும், உயர் தயார் நிலையிலும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ஏவப்பட்டவை நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மிகாமல் இருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
At 5:45 p.m. ET today, Islamic Revolutionary Guard Corps forces launched multiple ballistic missiles from Iran in an attempted surprise attack on U.S. forces based in the Middle East. All Iranian missiles were successfully intercepted. U.S. forces remain vigilant and at a high…
— U.S. Central Command (@CENTCOM) July 28, 2026
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்த அந்நாடு விரும்புவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ட்ரம்பின் கூற்றுக்கு முரணாக, தற்போது தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனக் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |