16 நாடுகளின் குடியேற்ற விண்ணப்பங்களை முடக்கிய அமெரிக்கா!
16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இது கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர குடியேற்ற உரிமம் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை இயக்குநா் ஜோசப் எட்லோவின் பிறப்பித்துள்ள உத்தரவில், “ஆப்கானிஸ்தான், மியான்மா், சாட், காங்கோ, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் உள்ளிட்ட 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் அனைத்து விண்ணப்பங்களும் முழுமையான மறுஆய்வுக்காக திருப்பி அனுப்பப்படும்.
இதில் மறுநோ்காணல்கள் நடத்தப்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |