அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்தை
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று(4) மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இதன் போது, பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான தமது உத்தியோகபூர்வ பயணத்தை நேற்றுமுன் தினம் நிறைவு செய்திருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன், நேற்றைய தினம் ஜோர்தானை சென்றடைந்துள்ளார்.
முக்கிய பேச்சுவார்தை
அண்டனி பிளிங்கனின் இந்தப் பயணத்தின் முதல் சந்திப்பாக அவர் லெபனான் பிரதமர் நஜிப் மிகடியை சந்தித்து, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், கட்டார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்து பேச்சுக்ளை முன்னெடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்தான் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பதற்ற சூழ்நிலை
இதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அணி திரண்டுள்ளதோடு, பலஸ்தீனக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளன.

இந்த பதற்ற சூழ்நிலையை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்ததையின் மூலம் தணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஏனைய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்