இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பல்...! உறுதிப்படுத்திய அமெரிக்கா
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானியப் போர்க்கப்பலான டெனா (Dena), அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பென்டகனில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானியப் போர்க்கப்பல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சர்வதேச நீர்ப்பரப்பில் இருந்த ஈரானியப் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (நீரடி உந்து கணை) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க டோர்பிடோ ஒன்றினால் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பியபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த சுமார் 150 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் பதற்றம்
இவ்வாறு பலியானவர்களின் உடல்களில் பலவற்றை இலங்கை கடற்படையினர் தற்போது மீட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்திருந்த நிலையில், அவை இந்தத் தாக்குதலில் பலியானவர்களுடையது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் இராணுவப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரி ஒருவரும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கப்பலில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள உயிர் பிழைத்தவர்களுடன் பேச இரண்டு அதிகாரிகள் காலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑YOU MAY LIKE THIS...! 👇🏻
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |