அமெரிக்காவின் எதிர்பாராத நடவடிக்கை! ஈரான் எண்ணெய் மீதான வரிகளை தளர்த்த திட்டம்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்த போரினால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவின் கொள்கை
தொடர்புடைய முன்மொழிவில், இந்த முடிவு உலகளாவிய கொள்வனவாளர்கள் அதிக எண்ணெயைப் பெற அனுமதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால், உலகெங்கிலும் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
அதன்படி, இது செயல்படுத்தப்பட்டால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகாலக் கொள்கையில் இது ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கும், மேலும் இது ஈரானுக்கு பல நன்மைகளைக் கொண்டுவரும்.
உலகளாவிய எண்ணெய் விலைகள்
போருக்கு முன்பிருந்தே சீனா ஈரானின் முக்கிய எண்ணெய் வாங்குபவராக இருந்து வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈரான் மீது விதித்துள்ள தடைகளால், சீனா ஈரானிய எண்ணெயை பெரும் தள்ளுபடியில் வாங்கி வருவதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் கூறியுள்ளார்.

ஈரானிய எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், 10 முதல் 14 நாட்களுக்குள் உலகளாவிய எண்ணெய் விலைகள் குறையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் இருப்புகளை வெளியிடுவது மற்றும் கடந்த வாரம் ரஷ்ய எண்ணெய் மீதான பல தடைகளை நீக்குவது உள்ளிட்ட, விநியோகத்தை அதிகரிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளின் பின்னணியில் இந்த முன்மொழிவு வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |