ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா! மறுக்கும் இந்தியா
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த செய்திகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) மறுத்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்றில் கூறப்பட்ட கூற்றுக்களை 'ஆதாரமற்றது மற்றும் ஜோடிக்கப்பட்டவை' என்று MEA தனது மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளது.
Claim: On a US-based channel, One America News Network (@OANN), former U.S. Army Colonel Douglas Macgregor made a statement suggesting that the United States is using Indian naval bases to attack Iran, amidst the ongoing Iran-US conflict.#PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) March 4, 2026
❌This claim is #FAKE… pic.twitter.com/nzcXCi7yT9
ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்
இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ FactCheck கணக்கு வழியாக இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மறுப்பு இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டையும், உரையாடல் மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அதன் நிலைப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்படுகிறது.
குறித்த செய்தியில் மும்பை மற்றும் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளை அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாகக் கூறியதிலிருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.
இரகசிய ஒத்துழைப்பு
இந்த இரகசிய ஒத்துழைப்பு பாரசீக வளைகுடாவில் ஈரானின் செல்வாக்கிற்கு எதிரான பரந்த இந்திய - அமெரிக்க மூலோபாய மையத்தின் ஒரு பகுதியாகும் என்று குறித்த ஊடகம் எதிர்வுகூறியது.
இந்த அறிக்கை எக்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் விரைவாக பரவத்தொடங்கியுள்ளன.
எனினும் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் சைபர் மோதல்களால் குறிக்கப்பட்ட அமெரிக்க - ஈரான் நிழல் போர் கொதித்து வரும் நிலையில், இந்தியாவின் தெளிவுபடுத்தல் ஒரு உறுதிப்படுத்தும் சக்தியாக அதன் பங்கை வலுப்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |