யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்!
யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் போதைபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றுமுன்தினம் (24) இரவு குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா அண்மையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |