சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி! அமெரிக்க தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் மீது கிரிமினல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
நேர்முகத் தேர்வு
இதையடுத்து, அவ்வாறு வந்தவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
இந்தநிலையில், தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

அத்தோடு, எச்1பி விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விசா பெறுவதற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம்
இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “அமெரிக்க சட்டத்தை மீறினால் மிகக்கடுமையான கிரிமினல் அபராதத்துடன் தண்டிக்கப்படுவீர்கள்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்கவும் நாட்டின் எல்லை மற்றும் குடிமக்களை பாதுகாக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 11 மணி நேரம் முன்