ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை
கடந்த மூன்று வாரங்களாகப் பெரும்பாலான சண்டைகளைத் தடுத்து நிறுத்தி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் , குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட x தள பதிவில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“மிரட்டுவதும், கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும் இனி சாதாரணமானவை அல்ல என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஈரானிய ஏற்பாடு
நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன். நீங்கள் தாக்கினால், அடியும் விழும். இல்லையெனில் இன்னும் ஆழமாக மூழ்கிவிடுவீர்கள்.

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க அச்சுறுத்தல்களால் அல்ல, ஈரானிய ஏற்பாடுகளால் மட்டுமே திறக்கும்” என்றும் காலிபாஃப் கூறியுள்ளார்.
இதன்படி பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதால், பஹ்ரைன், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இன்று காலை மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன .
அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவின் தாயகமான பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள், வந்துகொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதால், அந்நாடுகள் எச்சரிக்கை ஒலி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்
இதன்படி சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், குவைத்தில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை அமைப்பையும் , கத்தாரில் உள்ள முன்னறிவிப்பு செயற்கைக்கோள் ஆண்டெனா தளத்தையும் , பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய இராணுவம் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 3 மணி நேரம் முன்