ஈரானால் தாக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்! ஹோர்முஸில் அதிகரித்த பதற்றம்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஜாஸ்க் தீவுப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல் படையினால் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈரானிய புரட்சிகர காவல் படையின் எச்சரிக்கையைப் புறக்கணித்துச் சென்றமையால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை வழிநடத்துவதற்காக "சுதந்திரத் திட்டம்" என்ற திட்டத்தை இன்று(4.5.2026) தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த முயற்சிக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, 15,000 இராணுவ வீரர்கள், 100க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்