அமெரிக்காவின் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், ”வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து அமெரிக்கக் குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவற்றைச் சார்ந்திருக்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறான சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் குடியேற்றமற்ற விசா (Non-immigrant visa) வைத்திருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.
விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இந்தநிலையில் அவர்களின் விசா ரத்து செய்யப்படுவதுடன், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களைப் பெறுவதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம்.
Foreign visitors who abuse or otherwise become reliant on U.S. taxpayer-funded benefits, can face severe consequences. Nonimmigrant visa holders abusing these benefits may have their visas revoked and face ineligibility for future visas. Make sure you’re prepared to pay your own… pic.twitter.com/cMPcM98rRN
— U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) April 15, 2026
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள், அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் தங்களின் செலவுகளைத் தாங்களே பொறுப்பேற்பதற்கான நிதி வசதியைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குப் பயணம் செய்பவர்கள் அந்த நாட்டின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |