வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
Jaffna
Death
By Theepan
தமிழ் மக்கள் கூட்டணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் துஷ்யந்தன் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம்(04.12.2025) வியாழக்கிழமை அவர்களது உறவினர்கள் உறுதிப்படுதியுள்ளனர்.
36 உறுப்பினர்களை கொண்ட வலி. கிழக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணியை துஷ்யந்தன் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல்
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி வெற்றிப்பெற்று துஷ்யந்தன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

யாழ்.கோப்பாயைச் சேர்ந்த இவரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி