காவல்துறையினரால் தாக்குதலுக்குள்ளான தவிசாளர் நிரோஷ்: வைத்தியசாலையில் அனுமதி
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனாவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகிம்சை வழி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அமைதிப் போராட்டம்
மேற்குறிப்பிட்ட போராட்டம் நடைபெற்ற போது தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது காவல்துறையினரால் கடும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் விடுதி 9 இல் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |