வாசுவின் அமைச்சுப் பதவிக்கு புதியவரை நியமிக்க திட்டம்!
வாசுதேவ நாணயக்கார வகித்து வரும் நீர் வழங்கல் அமைச்சர் பதவியில் வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை சிங்கள ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சின் பணிகளில் இருந்து விலகி இருப்பதன் காரணமாக அமைச்சுக்கு நிர்வாக ரீதியாக சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்தே அரசாங்கம் இது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் தான் தொடர்ந்தும் அமைச்சர் பதவியின் கடமையை செய்து வருவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்றைய தினம் தனது உத்தியோகபூர்வ வீடு மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் கையளித்திருந்தார்.
இதனிடையே சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற அரசாங்கம் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் முதல் சந்தர்ப்பத்திலேயே தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என நாணயக்கார ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்தியினை காண்க
பதவி விலகத் தயாராகும் மற்றொரு அமைச்சர்! கோட்டாபய அரசுக்கு மீண்டுமொரு அடி