அரசுக்கு சவால் விடுத்துள்ள அமைச்சர் வாசு
government
Vasudeva Nanayakkara
challenges
By Sumithiran
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு விரோதமானது எனவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவளிக்கக் கூடாது எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவதில் தான்உறுதியாக இருப்பதாகவும் எனினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கும் அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு காட்ட இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.
தாம் இனி அமைச்சராகப் பதவி வகிக்கப் போவதில்லை எனவும் வேறு ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது சொந்த காலில் நின்று நடவடிக்கைகளை எடுக்குமாறு சவால் விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி