தீயில் எரிந்து பலியான குடும்பப் பெண்- கைது செய்யப்பட்ட கணவன்!
வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் தூவரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை என்பன வெளிவந்ததைத் தொடர்ந்து அயலவர்கள் சென்ற போது வீட்டின் அறைப் பகுதியில் அந்த வீட்டில் வசித்து வந்த பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் கதவினை உடைத்து தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் குடும்ப பெண் முற்றாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
அறையும் முழுமையாக எரிந்து உடமைகளும் அழிவடைந்துள்ளன.
பூவரசன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.