வவுனியாவில் வெடித்தது எரிவாயு அடுப்பு!
வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரப்பகுதியில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் குறித்த பெண் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா காவல்துறையினர் இது தொடர்பில் தடயவியல் காவல்துறையின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.