தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - CM விஜயிடம் பறந்த கோரிக்கை
தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று விசிக சட்டமன்ற குழுத் தலைவர் வன்னி அரசு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய போதே வன்னி அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், "இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கீழ் இப்போதும் ஈழத் தமிழர் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
தமிழர்கள் இனப்படுகொலை
கால்நூற்றாண்டு காலம் ஈழத் தந்தை செல்வா காந்தியின் அகிம்சை வழியில் ஈழத் தமிழ் போராட்டத்தை நடத்தினார். அவரைத் தொடர்ந்து, பிரபாகரன் ஆயுதம் ஏந்தி தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், இந்திய அரசுடன் உலக நாடுகள் சேர்ந்து தமிழ் ஈழ போராட்டத்தை முடக்கின. அந்த இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஈழத் தமிழர்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்ற இந்திய-இலங்கை அரசு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தம் இன்றும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளது.
சுயநிர்ணய உரிமை
எனவே, தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு, தனித் தமிழ் ஈழத்தை மீட்டமைப்பது, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மே 18-ஆம் அன்று தமிழ் ஈழக்கனவோடு உயிரிழந்தர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு முந்தைய அரசு நிறைவேற்றிய திட்டங்களை தற்போதைய ஆட்சியிலும் தொடர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |