வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள்

Sri Lanka Police Shivaratri Vavuniya Selvarajah Kajendren
By Kathirpriya Mar 10, 2024 05:51 AM GMT
Report

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்வர்களின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரிக்கெதிராக குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி அவர்களை அழைத்துச்சென்றதாகவும் இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நிகழ்வுகளின் போது அங்கே பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகப் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்த்தரமான செயல் : வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் கடும் கண்டனம்

காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்த்தரமான செயல் : வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் கடும் கண்டனம்

பூஜைக்கான ஏற்பாடு

சிவராத்திரிக்கு முன்பிருந்தே ஆலய நிர்வாகத்தினர் மீது காவல்துறையினர் அடக்குமுறைகளை பிரயோகித்து இருந்தனர், ஆலய நிர்வாகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த போது ஆலயத்திற்கு எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police

மேலும், தூர இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்களை 5 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், குடிநீரை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை.

5 கிலோமீற்றர் நடந்து சென்று குழந்தைகள் உட்பட பலர் தண்ணீர் தாகத்தில் இருந்த போதும் அதனை எடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, இதன்போது அங்கு பெரும் குழப்பநிலை நிலவி நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் மதியம் 2 மணிக்கு பின்னர் குடி நீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

காவல்துறையினர் கையகப்படுத்தினர்

அப்படி பாடுபட்டு கொண்டு செல்லப்பட்ட தண்ணீரையும் மாலை நேரம் காவல்துறையினர் திறந்து வெளியேற்றி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்.

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police

பின்னர், அங்கிருந்த பக்தர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முற்பட்டனர், சிவனுக்கு தயாரிக்கப்பட்ட  உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

10 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை காவல்துறையினர் பலவந்தமாக கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர், மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலவந்தமாக சப்பாத்து கால்களுடன் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

நீதிமன்ற அனுமதி

இவ்வாறு கைது செய்து கொண்டு சென்ற போது சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை நடத்தி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள், இழுத்துச் செல்லப்பட்ட போது மரக்கட்டைகள் தாக்கி கால்களில் காயமும், கை விலங்குகள் இறுக்கியதால் கைகளில் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police

இதன்போது அவர்களில் ஒருவரின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாணமான முறையில் கொண்டு சென்றனர், இதன்போது நெடுங்கேணி பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடத்தியிருக்கிறார்.

ஏனையவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நீதிமன்ற அனுமதி இருந்தும் காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்." என்றார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டர்களின் வேட்டிகளை களைந்து உள்ளாடைகளுடன் அழைத்து சென்றதை தாம் கண்டதாக ஆலய பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026