வெடுக்குநாறிமலை சர்ச்சை -ரணில் அளித்த உறுதிமொழி
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படு மென, அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ள தாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெரியாத நபர்களால் கடந்த மாதம் தகர்த்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம்
இதையடுத்து, நாடாளுமன்றத்திலும் இது, பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தனர்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச் சரவை கூட்டத்திலும் அதிபர், பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக் கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் அளித்த உறுமொழி
அவர் மேலும் குறிப்பிடுகையில், வவுனியா - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண் டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.
இப்பிரச்சினைக்கு புத்
தாண்டின் பின்னர் தீர்வை வழங்க
நடவடிக்கை எடுக்கப்படுமென
அதிபர் இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதி
மன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர்
சுட்டிக்காட்டினார் என்றார்.
