கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Expressways in Sri Lanka
By Sathangani
கொழும்பு (Colombo) அதிவேக வீதியில் கலகெதர பகுதியிலிருந்து இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட அவிசாவளை பகுதியில் இன்று (04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கலகெதர - பாதுக்க பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த வாகன விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்