பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!
Kandy
Matale
By Dharu
கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அம்பதென்னவில், இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானும் தனியார் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானில் பயணித்த எட்டு குழந்தைகள் காயமடைந்ததாக கட்டுகஸ்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் சுமார் 20 பாடசாலை குழந்தைகள் அந்த வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை காவல்துறை மேலும் கூறியுள்ளனர்.

எனினும் விபத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்