எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் இருவருக்கு அபராத தொகையும் மேலும் நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டையும் அளிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரிமாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு(delft) கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 6 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை(kayts) நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றையதினம் வரை விளக்கமறியல்
இம்மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 6 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.
ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை
இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இரு படகுகளுடன் கடற்படையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்