ஹோர்முஸ் நீரிணை அருகே பற்றியெரியும் கப்பல்
சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஓமான் கடற்கரைக்கு அருகே, ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல் காரணமாக கப்பலில் தீப்பிடித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கப்பலில் உள்ள 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் பணிப்பாளர் ஓபேஷ் குமார் சர்மா, எம்டி மரிவெக்ஸ் கப்பலில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் (0800GMT) இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்
ஓமான் கடற்கரைக்கு அப்பால் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் அவசர உதவியை நாடுவதாக இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் முன்னதாக X-ல் தெரிவித்திருந்தது.

கடல்சார் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் காரணத்தால் கப்பலில் தீப்பிடித்தது. அந்த வெடிப்பு கப்பலின் இயந்திர அறையைச் சிதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாரிவெக்ஸ் என்பது பலாவ் நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் ஒரு எண்ணெய்/ரசாயனக் கப்பலாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 19 மணி நேரம் முன்