வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஃபேக்ட் கிரெசெண்டோ சிறிலங்கா என்ற நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பில், இந்தக் காணொளி 2023 ஆண்டு ஓகஸ்ட் 13, அன்று பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அப்போது அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், தேசிய மக்கள் சக்தியின் (NPP) மொரட்டுவ தொகுதி அமைப்பாளராக மட்டுமே பணியாற்றியிருந்தார்.
தவறான குற்றச்சாட்டு
காணொளியில் அவர் குறிப்பிட்ட ஓகஸ்ட் 13 என்ற திகதியை அடிப்படையாகக் கொண்டு, இது இந்த ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால், ரிவர்ஸ் இமேஜ் (Reverse Image) தேடலின் மூலம் இந்தக் காணொளி 2023-ஆம் ஆண்டிலேயே இணையத்தில் பதிவேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவரே வாகனத்தை ஓட்டியபடி கமராவைப் பிடித்துப் பதிவு செய்யவில்லை என்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரே கமராவை இயக்கியுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் அமைச்சரான பிறகு வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்