ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்!

Shavendra Silva Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Final War
By Kanooshiya Oct 12, 2025 09:33 AM GMT
Report

ஈழப்போரின் இறுதி தருவாயில் கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவிடம் தொலைபேசியில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் பேசியதாகவும் அதை காணொளி எடுத்த ஊடகவியலாளரை அவர்கள் கொலை செய்ய தேடியதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் தற்போது நாட்டைவிட்டு தப்பியோடி அமெரிக்காவில் வாழ்வதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்

சவேந்திர சில்வாவுக்கு தொலைபேசி அழைப்பு

மேலும் கருத்து தெரிவித்த அவர், “2009 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ஊடகவியலாளர்கள் கூடியிருந்த நிலையில் சவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பேசினார்.

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்! | Video Released Regarding Shavendra Silva

வௌ்ளைக் கொடியுடன் சரணடைய நாள் முழுவதும் வருவதாகவும் மூன்றாம் தரப்பிடம் சரணடைவது சாத்தியமில்லை எங்களிடம் தான் சரணடைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் இருப்பது அறியாது கூறுகிறார்.

அதன்போது குறித்த தொலைபேசி உரையாடலை அங்கிருந்த ஒரு ஊடகவியலாளர் காணொளியில் பதிவு செய்கிறார்.

ரணில் தலைமையில் நடந்த கூட்டம்...! அரசை ஆட்டம் காண வைக்கும் நகர்வுகள்

ரணில் தலைமையில் நடந்த கூட்டம்...! அரசை ஆட்டம் காண வைக்கும் நகர்வுகள்

கொலை செய்ய தேடப்பட்ட ஊடகவியலாளர் 

அந்த ஊடகவியலாளரை கொல்வதற்கு இவர்கள் தேடித்திரிந்தனர். அவர் அமெரிக்காவுக்கு தப்பிச்சென்று தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்! | Video Released Regarding Shavendra Silva

குறித்த காணொளி இன்னும் என்னிடம் இருக்கிறது. 2009 மே மாதம் 17ஆம் திகதி இரவு 9.30க்கு தான் நான் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தேன்.

இறுதிப்போர் 17ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 17ஆம் திகதி காலை முதல் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச அனைவரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருபவர்கள் தொடர்பில் நீண்ட காலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், எனக்கு அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர்பில் பின்னரே அறியக் கிடைத்தது.” என தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் தூக்கு தண்டனை! பின்வாங்கினார் சரத் பொன்சேகா

மகிந்தவின் தூக்கு தண்டனை! பின்வாங்கினார் சரத் பொன்சேகா

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025