கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம்

Indian fishermen Anura Kumara Dissanayaka M K Stalin Sri Lanka Navy Kachchatheevu
By Kanooshiya Oct 12, 2025 05:43 AM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து கடற்றொழில் குடும்பத்தினரும் படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு கடற்றொழில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் : வெளியான விசேட வர்த்தமானி

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் : வெளியான விசேட வர்த்தமானி

கச்சைத்தீவில் போராட்டம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம் | Tamil Nadu Fishermen S Protest

இலங்கை சிறையில் தவிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி கடற்றொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பிரதமர் நினைத்தால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

யாழில் விபத்துக்கு காரணமாகும் பெற்றோரின் அசண்டையீனம் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

யாழில் விபத்துக்கு காரணமாகும் பெற்றோரின் அசண்டையீனம் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்

இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இடம்பெற்ற போராட்டத்தில் ஏராளமான கடற்றொழிலாளர்களும், கைதான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: தீவிரமடையும் போராட்டம் | Tamil Nadu Fishermen S Protest

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 8 ஆம் திகதி 30 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா...! சாவகச்சேரி மக்கள் விட்ட பிழை

ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா...! சாவகச்சேரி மக்கள் விட்ட பிழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025