யாழில் விபத்துக்கு காரணமாகும் பெற்றோரின் அசண்டையீனம் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka School Children
By Sathangani Oct 12, 2025 04:51 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞையைக் கவனிக்காது பெற்றோர் மாணவர்களுடன் பயணிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற ஆளுநர் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தின் காவல்துறை உயர் அதிகாரிகள், 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா...! சாவகச்சேரி மக்கள் விட்ட எழுத்துப்பிழை

ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா...! சாவகச்சேரி மக்கள் விட்ட எழுத்துப்பிழை

கனரக வாகனங்களால் நெரிசல்

அவர் மேலும் தெரிவிக்கையில், காவல்துறையினரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருக்கின்றது. ஆனாலும் இன்னமும் சில காவல் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

யாழில் விபத்துக்கு காரணமாகும் பெற்றோரின் அசண்டையீனம் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு | Parents Travel With Students Ignore Signals Jaffna

மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் அமையவேண்டும்.

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாடசாலைகளுக்கு முன்பாக காவல்துறையினர் கடமையில் உள்ள போதும் வீதிகளில் நெரிசல் காணப்படுகின்றது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும். 

அதேபோன்று பாடசாலைகளுக்கு அண்மையாக வீதிகளில் கனரக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் : வெளியான விசேட வர்த்தமானி

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் : வெளியான விசேட வர்த்தமானி

கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூக சீர்கேடு

பிரதான வீதிகளின் கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. காவல்துறையினரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

யாழில் விபத்துக்கு காரணமாகும் பெற்றோரின் அசண்டையீனம் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு | Parents Travel With Students Ignore Signals Jaffna

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை என்பதால் காவல்துறையினர் பாடசாலை நேரங்களில் இத்தகைய இடங்களில் கட்டாயம் கடமைகளில் ஈடுபடவேண்டும்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என ஆளுநர் தெரிவித்தார்.

அர்ச்சுனா எம்.பி மீது அடுக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள்!

அர்ச்சுனா எம்.பி மீது அடுக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025