புனித பாப்பரசருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் விஜித ஹேரத்
Vijitha Herath
Pope Francis
Vatican
By Sumithiran
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), இன்று புனித திருத்தந்தை பிரான்சிஸ்(pope francis) அவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
வத்திக்கானில்(vatican) உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் இன்று காலை அமைச்சர் விஜித ஹேரத், பாப்பரசருக்கு தனது இறதி அஞ்சலியை செலுத்தினார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக நித்திய இளைப்பாறினார்.
இறுதி நிகழ்வுகள்
அவரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம்(26) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பைடன், உட்பட உலகின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி