ரணிலின் புதிய திட்டம் - புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள்(காணொளி)
சிறிலங்கா அதிபரின் நெல் கொள்வனவு திட்டம் தொடர்பாக வட மாகாணத்துக்கு சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க நெல்லின் விலையை 100 ரூபாவாக நிர்ணயம் செய்வதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று(14) மாவட்ட அரசாங்க அதிபருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான சுற்று நிருபம் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிபரின் திட்டத்தை வெளியுலகத்துக்கு கொண்டு செல்லும் முழுநேர ஊடகவியலாளர்களை கூட்டத்திற்கு அனுமதிக்க மறுத்துள்ளார்கள் என மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து முரண்பாடு

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக முழு நேரமாக ஊடகத்தை நம்பி இருக்கும் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு தகவல் திணைக்கள அதிகாரிகள் தங்கள் ஒளிப்படங்களை எடுத்து ஊடகங்களுக்கு அனுப்புவதும் தகவல் திணைகள் அதிகாரிகள் பல ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்து வருகிறதுமாக இருக்கின்றார்கள்.
கடமை பட்டியல்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பாக கலந்து ஆலோசித்து குழு ஒன்று அமைத்து முரண்பாடு அற்ற மாவட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இலங்கையில் எந்த மாவட்டத்திலும் இல்லாத நடைமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. அரசாங்க அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில் தகவல் திணைக்கள அதிகாரி செயற்படுவது கடும் வேதனைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.
தகவல் திணைக்கள அதிகாரியின் கடமை பொறுப்பானது பிராந்தியத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் செய்திகள் தொடர்பாக தகவல்களை வழங்குவது மாத்திரமே.
அரசியல் பின்புலம்

ஆனால் அவர் அதற்கு மேலாக சென்று ஊடகவியலாளர்களுடைய பணியை முடக்குவதும் தொண்டு சார் நிறுவனங்களுடன் இணைந்து முக நூல்களிலும் அரசியல்வாதிகள் பின் திரிபவர்களை சுயாதீன ஊடகவியலாளர் என்று அடையாளம் ஒன்று கொடுத்து மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு களங்கம் ஏற்படும் விதத்திலும் அபகீர்த்தி ஏற்படும் விதத்திலும் அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டு வருகின்றார்.
இது தொடர்பாக பல தடவை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஊடகவியலாளர் தெளிவு படுத்தியிருந்தும் தான் ஒரு அரசியல் பின்புலத்தின் பின் இருக்கின்ற காரணத்தினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகின்றார்.'' என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.